உள்ளூர் செய்திகள்
வலூர் கிராம தேவதை ஆனைக்குளத்தம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.

வேலூர் வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-03-12 10:05 GMT   |   Update On 2022-03-12 10:05 GMT
வேலூர் வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்:

வேலூர் வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.

திருவிழாவையொட்டி, கடந்த 1&ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 11-ந் தேதி அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. 

செவ்வாய்க்கிழமை படவேட்டம்மன் உற்சவமும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News