உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது
நெமிலி அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிருகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் குமார் (வயது 18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (21) இவர்கள் இருவரும் பாலாற்றில் இருந்து மூலம் மணலை மூட்டையாக கட்டி கடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவேரிப்பாக்கம் போலீஸ் அவர்களை பிடித்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை செய்யப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.