உள்ளூர் செய்திகள்
கோமளவல்லி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கோமளவல்லி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-03-12 07:34 GMT   |   Update On 2022-03-12 07:34 GMT
சீர்காழி அருகே கோமளவல்லி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சீர்காழி:

சீர்காழி தேர்வடக்கு வீதி கீழ்பகுதியில் அமைந்துள்ள கோமளவல்லி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமர்சையாக நடந்தது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் 10நாள் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உத்ஸவம் கடந்த புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு, ஆராதனை, வீதியுலா நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலை திரளான பக்தர்கள் பால்குடங்கள், அலகுகாவடிகள் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர். 

பின்னர் மாலை சிவப்புகாளி ஆட்டத்துடன் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News