உள்ளூர் செய்திகள்
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம், வள்ளாலகரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, வட்டார மருத்துவர் சரத் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன் வரவேற்றார். தோல் நோய், கண் சிகிச்சை, பல், நீரழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். ரத்தப் பரிசோதனை, ஸ்கேனிங், இ.சி.ஜி. உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த முகாமில் பயன்படுத்தப்பட்டது. இதில் 300&க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
20 க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரை அளிக்கப்பட்டது. சித்தா, யுனானி, ஆயுர்வேதிக், ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் பிரபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், மகளிர் பகுதி சுகாதார செவிலியர் தமிழ்ச்செல்வி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இமையநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரபாண்டியன், வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.