உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க அறிவுறுத்தல்
ராணிப்பேட்டையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெமிலி :
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மூரில் உள்ள ஜிகே பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை)நடைபெற உள்ளது.
இதனையடுத்து நெமிலி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நெமிலி யூனியனுக்கு உட்பட்ட 47 கிராம பஞ்., தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் பேசியதாவது:-
ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் பஞ்., தலைவர்கள் 50 இளைஞர்களை தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து அனைத்து கிராமப்புற இளைஞர்களும் பயன்படும் வகையில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.