உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு

Published On 2022-03-11 13:48 IST   |   Update On 2022-03-11 13:48:00 IST
சீர்காழியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:

சீர்காழி நகரில் பிரதான சாலைகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பிடாரி வடக்குவீதி, கடைவீதி, தேர் வடக்குவீதி, மணிகூண்டு, கொள்ளிடமுக்கூட்டு பகுதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றி திரிகிறது. 

மாடுகள் வளர்ப்பவர்கள் பால்கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர். சாலையோரம் உள்ள பழகடைகள், பூக்கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் கீழே தள்ளி தின்றுவிடுகிறது. 

சில நேரங்களில் சாலையோரம் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பதும், அமர்ந்து விடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வரை அபராதம் நகராட்சி நிர்வாகம் விதித்தால் மட்டும் இதற்கு நிரந்தரதீர்வு காணமுடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News