உள்ளூர் செய்திகள்
சீர்காழியில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்

Published On 2022-03-10 15:25 IST   |   Update On 2022-03-10 15:25:00 IST
குடியிருப்புகளின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்ததல்.
சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங் கோவன், அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

ஜான்சிராணி, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழாவிற்கு மக்கள் பிரதிநிதியான ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அழைப்பு இல்லை.

விசாகர்; சட்டநாதபுரம் ஊராட்சியில் பசுமைவீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் எத்தனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 20 பயனாளிகளுக்கு 2வீடுகள் கொடுக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

சட்டநாதபுரம் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என அளிக்கப்பட்ட மனு மீதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அறிவழகன்; ராதா நல்லூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும். கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் நல்ல குடிநீர் வழங்கவேண்டும்.

சோனியாகாந்தி; புங்கனூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள காடாக்குடி முதல் ஆதமங்கலம் வரையிலான இணைப்பு சாலையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெருமங்கலம், புங்கனூர் ஊராட்சியில் புதிய ரேசன் கடைக்கு கட்டிடம் கட்டிதர வேண்டும்.

ரிமா, நிம்மேலி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றார்.

தென்னரசு; எடக்குடி வடபாதி ஊராட்சியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

பஞ்சுகுமார்; தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மின்சார வாரியம் சரி  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலவழகி; கீழமூவர்க்கரை கோவில் தெருவில் வீட்டின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரி செய்ய வேண்டும். கீழமூவர்க் கரையில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரிசெய்ய வேண்டும். 

கோணயாம்பட்டினம் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கதவு இல்லாமல் இருந்து வருகிறது.பெருந் தோட்டத்தில் சமுதாய கூடம் கட்டிடம் கட்டப்பட்டு முழுமைபெறாமல் உள்ளது.

நடராஜன்; திருநகரியில் பழுதடைந்துள்ள பொன்னன்தெரு மற்றும் ஆற்றங்கரை சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும்.

திருநகரி ரேசன் கடை சேதமடைந்துள்ளது. புதிய கட்டிடடம் கட்டவேண்டும்.விஏஓ அலுவலகம் சேதமடைந்துள்ளதால், ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

ஆகையால் புதிதாக கட்டிடம் கட்டவேண்டும் என்றார். இதில் மேலாளர் சசிக்குமார், பொறியாளர்கள் கலை யரசன், தெய்வானை, பணி மேற்பார்வையாளர்கள் பிருந்தா, ஓசைநாயகி, மோகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News