உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்

Published On 2022-03-10 15:03 IST   |   Update On 2022-03-10 15:03:00 IST
திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் மதுவிலக்கு சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ்சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற்றது. 

இதில் 99 இரண்டு சக்கர வாகனங்களும், ஒரு மூன்று சக்கர வாகனம் 6 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 106 வாகனங்கள் ரூ.15லட்சத்து 65ஆயிரத்து 400-க்கு ஏலம் போனது. இதற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.2லட்சத்து 81ஆயிரத்து 772 உட்பட மொத்தம்

ரூ.18லட்சத்து 47ஆயிரத்து 172&க்கு ஏலம் விடப்பட்டது.

Similar News