உள்ளூர் செய்திகள்
அருமனை அருகே சாலையின் நடுவில் நிற்கும் மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
அருமனை அருகே சாலையின் நடுவில் நிற்கும் மின்கம்பத்தை உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட எல்லை பாறசாலை - வெள்ளறைடை நெடுஞ்சாலையில் கேரளா அரசால் சீரமைப்பு பணி நடைபெற்றது. இச் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்கம்பங்கள் உள்ளன.
சாலை விரிவுபடுத்துவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்கம்பங்களை மாற்றி அமைக்க தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவை இதுவரை சரி செய்யப்படவில்லை.
சாலையின் நடுவில் உள்ள மின்சார கம்பங்கள் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக நிற்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே மின்கம்பங்களை சாலையில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.