உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க சார்பில் மகளிர் தின விழா
சீர்காழியில் அ.தி.மு.க சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், என்.சிவக்குமார், நகர செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற தேர்தலில் உறுப்பினர்களாக வெற்றிபெற்ற ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, நாகரெத்தினம் ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி கட்சி பெண்களுக்கு சேலைகளை எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.
பின்னர் தேர்தலில் பணியாற்றிய ஒன்றிய நகர தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்களும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் கருத்துரைகளை வழங்கினார்.
இதில் வைத்தீஸ்வரன்கோயில் பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், விஜயக்குமார், நிர்வாகிகள் அம்சேந்திரன், வக்கீல்கள் பாலாஜி, தியாகராஜன், நெடுஞ்செழியன் மற்றும் பரணிதரன், மற்றும் பலர் பங்கேற்றனர்.