உள்ளூர் செய்திகள்
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

Published On 2022-03-09 15:57 IST   |   Update On 2022-03-09 15:57:00 IST
திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
சீர்காழி:

திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிருந்து நோயாளிகளை மேல் சிகிச்சையாக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை அரசு வழங்கியுள்ளது. 

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திநடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம் மோகன் வரவேற்றார்.

இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசினார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் திமுக நிர்வாகிகள் பாண்டியன், ராஜ்குமார் அரசு மருத்துவர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர் முடிவு டாக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Similar News