உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2022-03-08 15:29 IST   |   Update On 2022-03-08 15:29:00 IST
வைத்தீஸ்வரன் கோவிலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டுள்ளது.
சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 49) விவசாயியான இவர் வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு மேல வீதியில் உள்ள கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார். 

மீண்டும் வந்து பார்த்த போது இருக்கைக்கு அடியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜதுரை வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News