உள்ளூர் செய்திகள்
மக்களை தேடி பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகம்
சீர்காழி அருகே எருக்கூரில் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். எருக்கூரில் முதியவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வரும் முடநீக்கு சிகிச்சையை பார்வையிட்டு மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், வட்டார சுகாதார அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.