உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

வள்ளியூர் முருகன் கோவிலுக்கு வந்த சென்னை பக்தர் திடீர் பலி

Published On 2022-03-08 11:41 IST   |   Update On 2022-03-08 11:41:00 IST
வள்ளியூர் முருகன் கோவிலுக்கு வந்த சென்னை பக்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேது ராமலிங்கம் (வயது 66). இவரும் இவரது நண்பரான பல்லாவரம் திருத்தணி நகரை சேர்ந்த ரிஷிகேசன் (55) என்பவரும், சாமி கும்பிடுவதற்கு வள்ளியூர் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

இங்கு அவர்கள் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தனர். அப்போது திடீரென்று சேது ராமலிங்கத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது நண்பர் ரிஷிகேசன், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் செல்லும் வழியிலேயே சேதுராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News