உள்ளூர் செய்திகள்
வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு

வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரி ஆய்வு

Published On 2022-03-05 06:01 GMT   |   Update On 2022-03-05 06:01 GMT
கபிஸ்தலம் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளான பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், சாலை பணிகள், உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

அப்பொழுது பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், ஜவஹர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பணி மேற்பார்வையாளர் சிந்தாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News