உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.வெற்றி

Published On 2022-03-04 16:40 IST   |   Update On 2022-03-04 16:40:00 IST
அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றது.
அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் நகராட்சியில் வெற்றிபெற்ற 36 வார்டு உறுப்பினர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றனர்.

 இதனையடுத்து நகரமன்ற தலைவர் தேர்ந்தேடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று காலை அரக்கோணம் நகராட்சி நகர மன்ற கூடத்தில் நடைபெற்றது.

இதில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகர மன்ற தலைவர் பதிவிக்கு தி.மு.க சார்பில் லட்சுமி பாரியும், அ.தி.மு.க சார்பில் நித்யா ஷியாம்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி பாரி 27 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நித்யா 9 வாக்குகள் பெற்றிருந்தார்.

Similar News