உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆற்காடு நகர மன்றத் தேர்தலில் திமுக வெற்றி

Published On 2022-03-04 16:39 IST   |   Update On 2022-03-04 16:39:00 IST
ஆற்காடு நகர மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
ஆற்காடு:

ஆற்காடு நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன நடந்துமுடிந்த நகர மன்ற தேர்தலில் தி.மு.க 21 வார்டுகளிலும், அ.தி.மு.க 4, பா.ம.க 3, விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 வார்டுகளில் வெற்றி பெற்றன. 

திமுக தலைமை நகரமன்ற தலைவர் பதவிக்கு ஜேபி பென்ஸ் பாண்டியனை அறிவித்தது.நகரமன்ற பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடந்தது. 

இதில் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேவி பெண்ஸ் பாண்டியன் 26 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.திமு.க வேட்பாளர் கீதா சுந்தர் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Similar News