உள்ளூர் செய்திகள்
பந்தலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
தேயிலை தோட்ட பகுதியை வனமாக மாற்றுவதால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, சேரங்கோடு பகுதியில் அரசு தேயிலைத் தோட்டத்தின் பல பகுதிகள் வனமாக மாற்றப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் கூறும்போது, தேயிலை தோட்ட பகுதியை வனமாக மாற்றுவதால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியும் வழங்கப்படுவதில்லை. அதற்கு குறைவாகவே வழங்கப்படுகிறது.
எனவே, உடனடியாக குறைந்தபட்ச கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு,கூடலூர் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.