உள்ளூர் செய்திகள்
பதவியேற்காமல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டையில் பதவி ஏற்காமல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

Published On 2022-03-02 16:39 IST   |   Update On 2022-03-02 16:39:00 IST
ராணிப்பேட்டை நகராட்சியில் பதவி ஏற்காமல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் புறக்கணித்தனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை,வாலாஜாப் பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகளுக்கும் தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், அம்மூர்,கலவை, திமிரி,விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. 

இதில் பதிவான வாக்குகள் கடந்த 22-ம் தேதி எண்ணப்பட்டது. இதில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் இன்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பதிவு ஏற்பு விழா நடைபெற்றது. 

அதன்படி அரக்கோணம் நகராட்சியில்-36 கவுன்சிலர்கள், சோளிங்கர் நகராட்சியில் -27 கவுன்சிலர்கள், வாலாஜாப்பேட்டை நகராட்சியில்-24 கவுன்சிலர்கள், ராணிப் பேட்டை நகராட்சியில் -30 கவுன்சிலர்கள், ஆற்காடு நகராட்சியில் - 30 கவுன்சிலர்கள், மேல்விஷாரம் நகராட்சியில் - 21 கவுன்சிலர்கள் என மொத்தம் 168 கவுன்சிலர்களும், 8 பேரூராட்சிகளில் 120 கவுன்சிலர்கள் என மொத்தம் 288 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகளுகளில் வெற்றி பெற்ற திமுக 23, அதிமுக 4, விடுதலை சிறுத்தை 2, சுயேட்சை 1  கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

இதில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உருவ படம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் நாங்கள் மேடையில் ஏறமாட்டோம் கீழேயே பதவியேற்றுக் கொள்கிறோம் என்றனர். அதற்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதவியேற்காமல் புறக்கணித்து சென்றனர்.
 பின்னர் கமிஷ்னர் அறைக்கு சென்று பதவியேற்று கொண்டனர்.

Similar News