உள்ளூர் செய்திகள்
நெமிலியில் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
நெமிலி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெமிலி:
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரவிச்சந்திரன் (32). தனியார் பஸ் டிரைவராக ஆற்காட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆற்காடு பஸ்ஸ்டாண்டில் இருந்து 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி பஸசை ஓட்டி சென்றார்.
காவேரிப்பாக்கம் அருகே பஸ் வந்தபோது பஸ்ஸின் முன்னால் அவளுர் கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் கோபி (19). பைக்கில் சென்றார்.
அப்போது ரவிச்சந்திரன் ஹாரன் அடித்துள்ளார். அதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.
மேலும் பஸ் பெரும்புலிப்பாக்கம் அருகே சென்றபோது கோபி பஸ்ஸை மடக்கி மறைத்து வைத்திருந்த காலி மதுபாட்டில்களை எடுத்து பஸ் கண்ணாடி மீது எறிந்துள்ளார்.
இதில் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து உள்ளே இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர்.இதுகுறித்து ரவிச்சந்திரன் அவளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் சேகர், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.