உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மன் கடத்திய டெம்போ பறிமுதல்
திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மன் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே தாணிவிளை, மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜில்குமார் (வயது 29). இவர் அனுமதி இல்லாமல் மாத்தூர் பகுதியில் செம்மன் வெட்டி டெம்போவில் கொண்டு செல்வதாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்க்கும் போது டெம்போவில் செம்மன் எடுத்து கொண்டு இருந்தார். உடனே டெம்போவை பறிமுதல் செய்து திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.