உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை

Published On 2022-02-27 14:50 IST   |   Update On 2022-02-27 14:50:00 IST
ராணிப்பேட்டையில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கடந்த 24-ந் தேதி கட்டிலில் இருந்து  தவறி விழுந்து இறந்துவிட்டார். 

இதனால் சதீஷ்குமாரின் மனைவி சரண்யா (22) மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வீட்டில் நேற்று  யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமார், சரண்யா தம்பதிக்கு 3 வயதிலும் 1 வயதிலும்  2 மகன்கள் உள்ளனர்.

கணவன் இறந்த 2 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்டதும் தாய் தந்தையை இழந்து அனாதையாக குழந்தைகள் இருவரும் தவிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News