உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலாஜாவில் நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-02-25 14:58 IST   |   Update On 2022-02-25 14:58:00 IST
வாலாஜாவில் நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:

வாலாஜா அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). இவர் நெசவு தொழில் செய்து வந்தார். 

இவரது மனைவி கல்பனா. தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக நெசவுத் தொழில் சரியாக நடக்கவில்லை. 

இதனால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் நாகராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று புடவை நெய்து கொண்டிருந்த அவர் அங்கிருந்து வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த கல்பனா மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அப்போது நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு மயங்கி நிலையில் கிடந்தார்.
இதனை கண்டு கல்பனா அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். 

அக்கம் பக்கத்தினர் நாகராஜை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News