உள்ளூர் செய்திகள்
.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-02-23 09:19 GMT   |   Update On 2022-02-23 09:19 GMT
காடையாம்பட்டி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் பூசாரிப்பட்டி கிராமத்தில் ஒரு ஓடைப்பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது நீர் நிலைப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதே போல மூக்கனூர் கிராமத்திலும் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Tags:    

Similar News