உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-02-23 09:17 GMT   |   Update On 2022-02-23 09:17 GMT
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:

திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையம் அருகே வ.உ.சி.சிலை சாலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்து சென்ற ஒருவரிடம்  ரூ.500 பறித்து சென்றதாக  பாரதிதாசனை வயது 23 போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில்  பாரதிதாசன்  மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள்  இருப்பது தெரிய வந்தது.

மேலும் பாரதிதாசன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை கொடுத்தார்.

அந்த  அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாரதிதாசனை கைது செய்ய உத்தர விட்டார்.

இதைத்தொடர்ந்து பாரதிதாசன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News