உள்ளூர் செய்திகள்
திமுக

மாநகராட்சி வார்டு தேர்தல்- 24 இடங்களில் தி.மு.க. வெற்றி

Published On 2022-02-22 09:21 IST   |   Update On 2022-02-22 09:46:00 IST
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில்  24 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

1 இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது.


Similar News