என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்
    X
    அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    கடலூரில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
    சென்னை:

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15  இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.  

    தமிழகத்தில் ஒரு சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது.

    * சென்னை எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

    * உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது.

    * கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


    Next Story
    ×