உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள், வாலாஜா அரசு மகளிர் கல்லூரியிலும், தென்கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும் நாளை எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலர்கள் நாளை காலை 7 மணிக்குள்ளாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அரசு கொரோனா விதிமுறைகளை பின் பற்ற வேண்டும், முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணும் இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களை தவிர செல்போன்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என தெரி விக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர்களுக்கு தங்களுக்கான அனுமதி சீட்டை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனுமதி சீட்டு இல்லாதவர்கள் எக்காரணத்தை கொண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.