உள்ளூர் செய்திகள்
மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

Published On 2022-02-20 07:54 GMT   |   Update On 2022-02-20 07:54 GMT
நண்டு ரூ.400-க்கும், இறால் ரூ.500-க்கும், நெய்மீன் 150-க்கும், கட்லா ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் சந்தை உள்ளது. இந்த சந்தையில் மீன் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

மற்ற நாட்களைவிட விடுமுறை நாட்களில் மீன் மற்றும் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை முதல் மீன் பிரியர்கள் பலரும் மீன் வாங்க குவிந்தனர். அதனால் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஒரு கிலோ பாறை மீன் ரூ.400-க்கும், வஞ்சரம் மீன் ரூ.700- க்கும், ஊளி மீன் ரூ.400-க்கும், மத்தி ரூ.140-க்கும், அயிலை ரூ.200-க்கும், வௌமீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.400-க்கும், இறால் ரூ.500-க்கும், நெய்மீன் 150- க்கும், கட்லா ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News