உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

கார்- டிப்பர் லாரி மோதல் 4 பேர் படுகாயம்

Published On 2022-02-20 07:48 GMT   |   Update On 2022-02-20 07:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கார்& டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 45), கனசூரப்பா (32).

அதே பகுதியை சேர்ந்தவர்கள் முரளி (25), வெங்கடேசன் (44).

இவர்கள் 4 பேரும் நேற்று மாலை சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளிக்கு செல்லும் சாலையில் தேவசானப்பள்ளி கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிராமத்துக்கு அருகே காரும், கருங்கல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் ரமேஷ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.  அவர்கள்  அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News