உள்ளூர் செய்திகள்
ஜானகிராமன்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் ஓட்டுப்பதிவு இல்லை

Published On 2022-02-19 09:27 GMT   |   Update On 2022-02-19 09:27 GMT
அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலையால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை.
காஞ்சிபுரம்:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் என்பவர் போட்டியிட்டார்.

கடந்த 10-ந் தேதி இவர் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வேட்பாளர் இறந்ததையடுத்து 36-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுப்பதிவு இல்லாததால் அந்த வார்டு பகுதி மட்டும் களையிழந்து காணப்பட்டது. மற்ற இடங்கள் அனைத்திலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News