உள்ளூர் செய்திகள்
கடற்கரை பூங்காவில் இறந்து கிடந்த முதியவர்
வேதாரண்யம் கடற்கரை பூங்காவில் இறந்த கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம்-3ம் சேத்தி கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). சலவைத் தொழிலாளி.
இவர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு கீழவெளி பகுதியில் தனது மகள் வீட்டில் வந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி கடைவீதிக்கு சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லையாம். 17ம் தேதி வயதானவர் கடற்கரை பூங்கா அருகே இறந்து கிடப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சுப்பிரமணியன் மனைவி கனகவள்ளி (45) மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இறந்தவர் தனது கணவர்தான் என உறுதி அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.