உள்ளூர் செய்திகள்
மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம்
திருக்குவளை அருகே காருகுடி மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை&கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம்.
அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.