உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும்

Published On 2022-02-17 14:20 IST   |   Update On 2022-02-17 14:20:00 IST
வேளாங்கண்ணி அருகே பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பரவை காய்கறி சந்தை அமைந்துள்ளது. 

பழமை வாய்ந்த இக்காய்கறி சந்தையில் உள்ளூரை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் என, அதிக விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பரவை காய்கறி சந்தை அருகாமையில் உள்ள தனியார் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனியார் இடத்தில் காய்கறி சந்தை இயங்கி வருவதால் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.15 லட்சம் வருவாயும், அதன் மூலமாக ஊராட்சி மன்றத்திற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வருவாயும் கிடைக்காமல் இருப்பதாக கூறி, மீண்டும் பரவை காய்கறி சந்தையை அதே இடத்தில் கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Similar News