உள்ளூர் செய்திகள்
வேலூரில் பிரசாரத்தில் முந்தும் சுயேட்சை வேட்பாளர்கள்
வேலூர் மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி மேயர் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வருகிற 19&ந்தேதி நடக்கிறது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
2-வது முறையாக மாநகராட்சி தேர்தல் நடப்பதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
2 வார்டுகளில் போட்டியின்றி தி.மு.க. வினர் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 58 வார்டுகளில் 354 பேர் காத்தில் உள்ளனர். இதில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் 82 பேர் உள்ளனர்.
நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனைத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல வார்டுகளில் சுயேச்சைகள் ஆட்டோ மற்றும் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சி வேட்பாளர்களை மிஞ்சும் அளவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரு சில வார்டு களில் சுயேச்சை வேட்பாளர் களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப் படுகிறது. அந்த வார்டுகளில் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
பிரசாரத்தில் முந்தும் சுயேட்சை வேட்பாளர் களால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.