உள்ளூர் செய்திகள்
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-02-16 14:26 IST   |   Update On 2022-02-16 14:26:00 IST
வேலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோடு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பிடிசி ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுபற்றி மாநகராட்சியில் புகார் தெரிவித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக லாரிகள் மூலம் அந்த பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பிறகு பிடிசி ரோடு பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

Similar News