உள்ளூர் செய்திகள்
போலீசார் கொடி அணிவகுப்பு

நாகப்பட்டினத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-02-16 07:54 GMT   |   Update On 2022-02-16 07:54 GMT
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
நாகப்பட்டினம்:

வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்உத்தரவின்பேரில் நாகை உட்கோட்டம் திட்டச்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப்கென்னடி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தாலுகா போலீஸ் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என 200 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News