உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பண்ருட்டி, தொரப்பாடியில் பதட்டமான வாக்குசாவடி குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2022-02-15 17:22 IST   |   Update On 2022-02-15 17:22:00 IST
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பண்ருட்டி,தொரப்பாடியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பண்ருட்டி:

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பண்ருட்டி,தொரப்பாடியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பண்ருட்டி, புதுப்பேட்டையில் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அமைதியாகவும் பொது மக்கள் அச்சம் இன்றியும் வாக்களிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்.

அதோடு பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பதட்டமான வாக்குசாவடி மையங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

Similar News