உள்ளூர் செய்திகள்
மோசடி

மோசடி வழக்கு- தபால் ஊழியர் பணியிடை நீக்கம்

Published On 2022-02-15 15:43 IST   |   Update On 2022-02-15 15:43:00 IST
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தபால் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கண்டாச்சிபுரம் தபால் நிலையத்தில் வேலைபார்த்து வரும் முருகன் அரசு வேலை வாங்கி தருவதாக பெண் ஒருவரை ஏமாற்றி ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முருகனை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News