உள்ளூர் செய்திகள்
திட்டக்குடியில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
திட்டக்குடி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரம் தேங்கி சாக்கடை நீராக மாறி உள்ளது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. விருத்தாசலம்- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை ஓரம், திட்டக்குடி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரம் தேங்கி சாக்கடை நீராக மாறி உள்ளது. அதிக அளவில் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளது.
இது குறித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரடி யாக பலமுறை தெவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாயை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.