உள்ளூர் செய்திகள்
.

விஷம் குடித்தவர் சாவு

Published On 2022-02-15 15:02 IST   |   Update On 2022-02-15 15:02:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், ஏமனூர் பகுதியை சேர்ந்த வாலிபர் விஷம் குடித்து பலியானார்.
தருமபுரி:

திருப்பத்தூர் மாவட்டம், ஏமனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது22). இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News