உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புதுப்பொலிவு பெறுகிறது வேலூர் மாநகராட்சி அலுவலகம்

Published On 2022-02-15 14:52 IST   |   Update On 2022-02-15 14:52:00 IST
வேலூர் மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவு பெறுகிறது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி மேயர் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இரண்டாவது முறையாக மாநகராட்சி தேர்தல் நடப்பதால் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. 

வேலூர் மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகம் முழுவதும் புதிய வண்ணம் தீட்டப்படுகிறது. மேலும் கண்ணாடி ஜன்னல்கள் போன்றவை சுத்தம் செய்யப்படுகின்றன.

வேலூர் மாநகராட்சி அலுவலகம் வர்ணம் தீட்டப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் தற்போது புதிதாக சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்படுகிறது. 

விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News