உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் போலீசாருக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அறிவுரை.

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புதிய கட்டுப்பாடு

Published On 2022-02-15 14:43 IST   |   Update On 2022-02-15 14:43:00 IST
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகளை டி.ஐ.ஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியின் போது போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. 

நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-

தொடர்ந்து பல்வேறு பணிகளின் காரணமாக போலீசார் மன அழுத்தத்தில் உள்ளனர். தேர்தல் பணி என்பது போலீசாருக்கு புதிதல்ல. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது போலீசாருக்கு தேவையான உணவு உள்ளிட்டவை நேரடியாக வழங்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால் அவரிடம் பேசக்கூடாது. கைகள் மூலம் சைகை காட்ட கூடாது. செல்போனில் எந்த காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் பேசக்கூடாது.

சில போலீசார் தவறுகளில் ஈடுபடுகின்றனர்.அது ஏன் என்று தெரியவில்லை. போலீஸ்காரர் ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த காவல்துறையை பாதிக்கும்.நமக்கு குடும்பம் முக்கியம். பணியில் கவனக் குறைவு அலட்சியமாக இருக்கக்கூடாது.
இவர் அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஐ.ஜி. பேசிக்கொண்டிருக்கும் போது போலீசார் ஒருவருக்கொருவர் தனியாக பேச ஆரம்பித்தனர். இதனால் அதிக சத்தம் கேட்டது.

அப்போது டிஐஜி ஆனி விஜயா ஆவேசம் அடைந்தார். கூட்டத்தில் பேசியது யார் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது போலீசார் யாரும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அனைத்து போலீசாரையும் எழுந்து நிற்குமாறு கூறினார்.உடனடியாக அனைவரும் எழுந்து நின்றனர்.

 அவர்களுக்கு அறிவுரை கூறி அமர வைத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில்:&
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் அரசியல்வாதிகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவு வாங்கி சாப்பிடக்கூடாது தேவை இல்லாமல் பேசக் கூடாது என்றார்.

Similar News