உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது குழந்தை சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பொம்மதாதனூர் அடுத்துள்ள என்.குத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு 6 வயதில் மவுனிஸ் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மவுனிசை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மவுனிஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.