உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம் அடைந்தார்.
காவேரிப்பட்டணம்:
பெங்களூரு பழைய பைப்பனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் இன்றுகாலை மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணம் அருகேயுள்ள சப்பானிப்பட்டி பகுதியில் வந்த போது விபத் தில் அருண்குமார் படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.