உள்ளூர் செய்திகள்
.

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது

Published On 2022-02-15 13:36 IST   |   Update On 2022-02-15 13:36:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மலசோனை கிராமத்தில் ஒருவர் கள்ளத் துப்பாக்கி வைத்து இருப்பதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது சீனிவாச ஆசாரி (வயது40) என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது கள்ளத்துப்பாக்கி சிக்கியது. இதனை அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் பறி முதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சீனி வாச ஆசாரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.

Similar News