உள்ளூர் செய்திகள்
பல்லடம்- உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
உடுமலை தில்லை நகரில் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
உடுமலை தில்லை நகரில் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ரிஷப வாகனத்தில் லிங்கேஸ்வரர் ரத்தினாம்பிகை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். நந்தியும் பகவானுக்கும் சிறப்பு அலங்கார அபிஷேக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் உடுமலை போடிபட்டி சூர்யா கார்டன் காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களிலும் பிரதோஷத்தைஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.