உள்ளூர் செய்திகள்
பழுதாகி நின்ற லாரி.

பல்லடத்தில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி - போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-02-15 13:08 IST   |   Update On 2022-02-15 13:08:00 IST
போக்குவரத்து போலீசார் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு இருந்த வாகனங்கள், மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பல்லடம்:

பல்லடத்தில் காடா ஜவுளி பண்டல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஓன்று சென்றது. மேலும் ஜவுளி பண்டல்களை ஏற்றுவதற்காக நால்ரோடு பகுதியில் இருந்து மங்கலம் ரோடு வழியாக சென்றது. இந்தநிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பு திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. 

லாரியின் ஓட்டுனர் எவ்வளவோ முயன்றும் லாரி "ஸ்டார்ட்" ஆகவில்லை. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளான பல்லடத்தில், நேற்று முகூர்த்த நாள் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதில் லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால், மங்கலம் ரோடு, கோவை - திருச்சி மெயின் ரோடு, பொள்ளாச்சி ரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதையடுத்து போக்குவரத்து போலீசார் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு இருந்த வாகனங்கள், மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Similar News