உள்ளூர் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

Published On 2022-02-15 09:54 IST   |   Update On 2022-02-15 09:54:00 IST
திருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:


நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்யக் கூடிய ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் கற்பகம் விருச்சம் அறக்கட்டளை சார்பில் திருக்குவளை அருகே உள்ள உத்திரங்குடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட 165 விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களாக பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. 

அருள் நத்தவன அறக்கட்டளை நிறுவனர் எம்.ஆர்.பி.வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் ஜே.அரிசந்திரன், தன்னார்வலர்கள் எஸ்.நரேஷ், எஸ்.அஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நிவாரண உதவிகளை செய்த கற்பகம் விருச்சம் அறக்கட்டளை நிறுவனர் சத்தியநாராயணனுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Similar News