உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விஷம் குடித்த முதியவர் சாவு

Published On 2022-02-15 09:36 IST   |   Update On 2022-02-15 09:36:00 IST
திருவாரூர் அருகே சிறுநீரக கோளாறால் விஷம் குடித்து முதியவர் இறந்தார்.
திருவாரூர்:

திருவாரூர் அடுத்த நீலனூரை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 67). விவசாயம் செய்து வந்தார். இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. அதற்காக இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இவருக்கு நோய் குணமாகாததால், மனவேதனை அடைந்து, வீட்டில் யாரும் இல்லாதபோது, வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து, மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் இறந்தார். அவரது மகன் சுதாகர் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். 

இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News